திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 3 கோடியே 69 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் யுவராஜ் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது புதியதாக பேரூராட்சி அலுவலகம் கட்ட ரூபாய் 1கோடியே 27 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையும் அதே போன்று வெள்ளாளர் தெரு பகுதியில் அமைந்துள்ள செவ்வாய் சந்தையின் அருகே கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் மதிப்பில் புதியதாக 108 கடைகள் கொண்ட வளாகம் கட்டுவதற்கான பணி என இரு பணிகளுக்குமான பூமி பூஜை போடப்பட்டது சிறப்பு அழைப்பாளர்களாக திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் பொறியாளர் யுவராஜ் துரை மற்றும் முன்னாள் எம்எல்ஏவும் திமுக திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வீ தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர் நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி இளங்கோ சத்தியமூர்த்தி பழனி திமுக நிர்வாகிகள் சுரேஷ் நகர் சரவணன் செங்குட்டுவன் இளங்கோ எம் கே தினேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story