டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயம்

டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலத்த காயமடைந்தார்
நாமக்கல் மாவட்டம். குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் பகுதியில் வசிப்பவர் பழனியம்மாள், 58. டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் காலை 10:30 மணியளவில், கத்தேரி பிரிவு பகுதியில் டி.வி.எஸ். டூவீலரில் சென்று கொண்டிருந்தார். கத்தேரி பகுதியிலிருந்து வேகமாக வந்த லாரி ஒன்று, இவர் வந்த டூவீலர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார், லாரி ஓட்டுனர், திருச்சி, துறையூர் பகுதியயை சேர்ந்த கதிரவன், 32, என்பவரை கைது செய்தனர்.
Next Story