தமிழ்நாடு முதலமைச்சரிடம் விருது வாங்கிய மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி
Sholavandan King 24x7 |24 Aug 2024 12:51 AM GMT
சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் வழங்கினார்
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மெச்சத்தகுந்த முறையில் பணியாற்றிய காவல் துறையினர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உயரிய விருதுகளாக இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம், அதன்படி தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.இதில் முதலமைச்சர் பதக்கத்திற்கு மதுரை போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் தங்கமணி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதக்கம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.இவர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பல்வேறு விதமான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களை வெளியிட்டு விருது பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story