எடப்பாடியில் ஹோட்டல் சமையலறையில் நள்ளிரவில் தீ விபத்து

எடப்பாடியில் ஹோட்டல் சமையலறையில் நள்ளிரவில் தீ விபத்து
எடப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள பூட்டிய ஹோட்டல் கடையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால்  பெரிய அளவில் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே சீனி என்பவருக்கு சொந்தமான  சரவணபவன் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.... இந்த நிலையில் இரவு கடையை அடைத்த நிலையில் சமையல் அறையில் மீதம் இருந்த நெருப்பு விறகு சமையலறை முழுவதும் பற்றி மல மல வேண தீப்பிடிக்க தொடங்கியது.... உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தனது உயிரை துச்சமாக நினைத்து தீயை முற்றிலும் அணைத்தனர் அப்போது ஓட்டலில் இருந்து ஐந்திற்கும் மேற்பட்ட முழு சிலிண்டர்களை தூக்கி வெளியில் எறிந்தனர் அப்போது அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.... இதனால் பெரிய அளவில் விபத்து தவிர்க்கப்பட்டது மேலும் விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்... நள்ளிரவு 2 மணி அளவில் ஹோட்டல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது....
Next Story