புதுக்கோட்டையில் டிஎஸ்பிக்கள் மாற்றம்!

புதுக்கோட்டையில் டிஎஸ்பிக்கள் மாற்றம்!
அரசு செய்திகள்
தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்ட குற்ற புலனாய்வு துறை டிஎஸ்பி கல்யாணகுமார் கரூர் மாவட்டத்திற்கும், குற்றப்பிரிவு துறை டிஎஸ்பி செல்வம் திருப்பூருக்கும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி கந்தசாமி விழுப்புரத்திற்கும் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Next Story