பல்லடம் அரசு மருத்துவமனையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
Palladam King 24x7 |24 Aug 2024 6:06 AM GMT
சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
பல்லடம் அரசு மருத்துவமனை கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு தினமும் வருகின்றனர்.1000க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்த மருத்துவமனையில் 150 க்கு மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக குப்பைகள் எடுக்காத காரணத்தினால் கடுமையான துர்நாற்றம் வீசுகின்றது.மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே குப்பைகளை உடனடியாக அள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story