தாளவாடி அருகே சாலையை கடந்த சிறுத்தை புலி

தாளவாடி அருகே சாலையை கடந்த சிறுத்தை புலி
தாளவாடி அருகே சாலையை கடந்து சிறுத்தை புலி
தாளவாடி அருகே. சாலையை கடந்த சிறுத்தைப்புலி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட பீம்ராஜ்நகர், சூசைபுரம், தொட்டகாஜனூர், ஓசூர் கிராமத்தையொட்டி உள்ள கல்குவாரியில் சிறுத்தைப்புலி பதுங்கி இருக்கிறது. இந்த சிறுத்தைப்புலி அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சில்வாடிக்கு 2 பேர் காரில் சென்று உள்ளனர். அப்போது ஓசூர் அருகே உள்ள கல்குவாரியில் இருந்து வெளி யேறிய சிறுத்தைப்புலி அங்குள்ள சாலையை கடந்து சென்றது. இதை கண்டதும், காரில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காரில் இருந்தபடி தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்தனர். பின்னர் சிறுத்தைப்புலி சாலையில் இருந்து தாவி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
Next Story