இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எம்.எல்.ஏ.தமிழரசி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைகிராமம், விசவனூர் புதுக்கோட்டை, சமுத்திரம் முத்தூர், கட்டனூர் உள்ளட்டட11 கிராமங்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முகாமை எம்எல்ஏ தமிழரசி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர் . அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றும்போது தமிழக முதல்வர் மக்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் இதுவும் ஒரு சிறப்பான திட்டமாகும். முதல்வர் கல்வித் துறையையும் மருத்துவ துறையும் தனது இரு கண்களாக பாவித்து அதற்கான சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார். பின்னர் இதில் கர்ப்பிணிபெண்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம், கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கான பயனாளிக்கு பட்டாக்களையும் , பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளையான்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், தமிழ்மாறன் , கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
Next Story