திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், எம்பி எம்எல்ஏ பங்கேற்பு
Maduranthakam King 24x7 |24 Aug 2024 9:23 AM GMT
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, கழகத்தின் பவள விழா ஆகியவற்றை சிறப்பாக கொண்டாட வேண்டும் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேச்சு!
காஞ்சி தெற்கு மாவட்டம்,இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பேரூர் செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் சிற்றரசு ஆகியோர் தலைமையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, கழகத்தின் பவள விழா ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர் முன்னதாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு காரணமான கழகத் தோழர்களுக்கு நன்றி தெரிவித்தனர். முன்னதாக புதிதாக உறுப்பினர்களாக சேர்த்த 2500 நபர்களின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சம்யுத்தாஅய்யனார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பால்ராஜ் உள்ளிட்ட பேரூர் கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story