மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
Andippatti King 24x7 |24 Aug 2024 11:46 AM GMT
கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது.இந்தப் பள்ளியில் முத்துரெங்கபுரம், தேக்கம்பட்டி பொன்னம்மாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியானது கிராமத்தின் அருகில் இல்லாமால் தனியாக உள்ளது .மேலும் இந்தப் பள்ளியில் சுற்று சுவர் இல்லாமல் இருப்பதினால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்து வருகிறது .இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று தேக்கம்பட்டி கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்
Next Story