தனியார் பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா நடைபெற்றது

தனியார் பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா நடைபெற்றது
தனியார் பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது
ஈரோடு பள்ளிபாளையம் சாலையில் அமைந்துள்ள நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ணர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளியின் முதல்வர் ராஜேஷ் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். பள்ளி ஆசிரியை சாந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வந்து கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கிருஷ்ணர் ஜெயந்தி விழாவின் சிறப்புகள் குறித்து மாணவ மாணவியர் மத்தியில் எடுத்துரைத்து பேசப்பட்டது. பள்ளியின் முதல்வர் நன்றி கூற, கிருஷ்ணர் ஜெயந்தி விழா நிறைவு பெற்றது . இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
Next Story