தம்மம்பட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலப்பாதை: எஸ்.பி. ஆய்வு

தம்மம்பட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலப்பாதை: எஸ்.பி. ஆய்வு
ஆய்வு
கெங்கவல்லி:தம்மம்பட்டியில் நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலப் பாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் ஆய்வு செய்தார். தம்மம்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செப்டம்பர் 11 ஆம் தேதி உடையார்பாளையம், கடைவீதி, நடுவீதி வழியாக ஊர்வலமாக கொண்டுசென்று, தம்மம்பட்டி காந்திநகர் பகுதியில் உள்ள சுவேத நதி தடுப்பணையில் கரைக்கப்பட உள்ளன.இதையடுத்து, சிலைகள் கொண்டுசெல்லப்பட உள்ள ஊர்வலப் பாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story