அன்னவாசலில் மாபெரும் தேர் பவனி!

நிகழ்வுகள்
அன்னவாசல் புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் ஆலய தேர் பவனி நேற்று நடந்தது. இந்த விழாவிற்கான திருப்பலியினை பங்குதந்தை தேவராஜ் செய்தார். பின்னர் புனித ஹங்கேரி எலிச பெத்தம்மாள் தேர்பவனி வானவேடிக்கையுடன் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்து அடைந்தது. அதனைதொடர்ந்து திருவிழா திருப்பலியும், மலர் அலங்கார தேர் பவனியும் நடைபெற்று இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story