கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதக்கம்

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதக்கம்
பதக்கம்
மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை தென்னிந்திய அளவில் கரும்பு அபிவிருத்தியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது.மூங்கில்துறைபட்டில் இயங்கி வரும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை -1, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தென்னிந்திய கரும்பு மற்றும் சர்க்கரை தொழிற்சங்கம் கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற விழாவில் மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அபிவிருத்தியில் முதலிடம் பிடித்ததற்காக வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. வெள்ளிப் பதக்கத்தை ஆலையின் செயலாட்சியர் கண்ணன் பெற்றுக்கொண்டார். கரும்பு அபிவிருத்தி அலுவலர் ராஜேஷ் நாராயணன், துணை தலைமை ரசாயனர் கணேசன், உதவி பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story