சங்கராபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

சங்கராபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
முகாம்
சங்கராபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் சார்பில் டி.எம்.பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் வரவேற்றார். முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், ராஜேந்திரன், சுதாகரன், சுரேஷ், நடராஜன், முன்னாள் தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி அம்மன் எலக்ட்ரிகல்ஸ் குமரேசன் முகாமை தொடங்கி வைத்து மருத்துவ அடையாள அட்டையை வழங்கினார்.
Next Story