ஈரோடு மாவட்டம் தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமையாசிரியர் சந்தோஷ் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி மன்ற தலைவி திராட்சாயினி, தன்னார்வலர் ராமாபுரம் குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற சந்தோஷ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story