கிணற்றில் முதியவர் உடல் போலீசார் விசாரணை

கிணற்றில் முதியவர் உடல் போலீசார் விசாரணை
விசாரணை
கள்ளக்குறிச்சி, கவரைத் தெருவைச் சேர்ந்தவர் கோபால், 84; பேக்கரி கடை உரிமையாளர். இவருக்கு 3 பெண், 1 ஆண் என 4 பிள்ளைகள் உள்ளனர். கோபால் தனது சொத்துக்களை, 3 பெண் பிள்ளைகளுக்கு மட்டும் எழுதி கொடுத்துள்ளார். மகனுக்கு எதுவும் தரவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோபால் வழக்கம்போல் சாப்பிட்டு துாங்கியுள்ளார். நேற்று காலை அவரது மகன் ரவிச்சந்திரன் எழுந்து பார்த்தபோது, கோபால் வீட்டில் இல்லாததால் பல்வேறு இடங்களில் தேடினார். அதில், வீட்டில் உள்ள கிணற்றில் கோபால் இறந்து கிடந்தது தெரிந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கோபாலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story