புதிய பொலிவு பெரும் நெடுஞ்சாலை பாலங்கள்

புதிய பொலிவு பெரும் நெடுஞ்சாலை பாலங்கள்
புதிய பொலிவு பெரும் நெடுஞ்சாலை பாலங்கள்
புதிய பொலிவு பெரும் நெடுஞ்சாலை பாலங்கள் சத்தி, ஆக.22 - பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலையில் உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன அந்த வகையில் கோபி கோட்டம், சத்தி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சத்தி பெரியகொடிவேரி கடம்பூர் சாலை, டி.ஜி.புதூர், கெம்பநாய்க்கன்பாளையம், வாணிப்புத்தூர், தூ.நா. பாளையம், சதுமுகை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் உள்ள பெரிய, சிறு, குறு பாலங்களின் நீர்வழிப் பாதைகளில் மழை காலங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் புதர்களை நீக்கி, தூர்வாரி, சுத்தம் செய்து பெயின்ட் அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கோபி கோட்டப் பொறியாளர் தலைமையில் உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தினார்கள். |
Next Story