கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து
Sholavandan King 24x7 |25 Aug 2024 9:07 AM GMT
மதுரை மருத்துவக் கல்லூரி நுழைவாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரை மருத்துவக் கல்லூரி நுழைவாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வணக்கத்திற்கு மதுரை துணைமேயர் நாகராஜன்,மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி,மாமன்ற உறுப்பினர் குமரவேல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் க.நீதிராஜா,மாவட்டப்பொருளாளர் க.சந்திரபோஸ், மாவட்ட இணைச்செயலாளர் ஆ.பரமசிவன், மாநில செயற்குழு உறுப்பினர் * இரா.தமிழ்,வடக்கு வட்டக்கிளை செயலாளர் கூ.முத்துவேல், அ.அர்ஜுன்குமார், நகர சுகாதார செவிலியர் சங்க தலைவர் மு.பஞ்சவர்ணம் மற்றும் இந்திய மாணவர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னணி ஊழியர்கள் மதுரை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story