பைக் விபத்தில் வாலிபர் பலி!

பைக் விபத்தில் வாலிபர் பலி!
விபத்து செய்திகள்
திருமயம் புதுக்கோட்டை டவுன் மாப்பிள்ளை யார் குளக்கரை பழனியப்பா நகரை சேர்ந்தவர் நபிக்கான்(24). இவர் நேற்று காலை பைக்கில் சிவ கங்கை மாவட்டம் திருப்பத்துார் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். லெனா விலக்கு அருகே வந்த போது பைக் நிலைதடுமாறி சாலை நடுவில் இருந்த தடுப்பு கட்டை மீது மோதி யது. இதில் படுகாயமடைந்த நபிக்கானை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே நபிக்கான் உயிரிழந்தார். 'இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story