மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு

மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு
தேர்வு
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.தலைமை ஆசிரியர் கலாபன் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அரசின் நிபந்தைனைகளுக்குட்பட்டு, நிர்வாகிகள் முன்மொழியப்பட்டு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கையை உயர்த்தி, ஆதரவு தெரிவித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய நிர்வாகிகளாக தலைவர் காயத்ரி, துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, உறுப்பினர்கள் அம்சவல்லி, குலோத்துங்கன், கவிதா, ஹாருன்ரஷித், சுதா குருசாமி, ஏழுமலை, ரேவதி, புஷ்பா, நூர்ஜகான், பழனியம்மாள், கஜேந்திரன், சரஸ்வதி, அஸ்வின்குமார், ஷமீம்பானு, அன்பழகன், ஷகிலா, ராமன், தாகப்பிள்ளை, சிவராமன், அமுதவேல், கிரிஜா, கலாபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பள்ளி வளர்ச்சிக்கு ஒற்றுமையாக செயல்படுவதாக உறுதி அளித்தனர்.
Next Story