சங்ககிரியில் ஆதரவற்றோர் ஆசிரமம் கட்ட அடிக்கல்நாட்டு விழா !

சங்ககிரியில் ஆதரவற்றோர் ஆசிரமம் கட்ட அடிக்கல்நாட்டு விழா !
சங்ககிரி: அமுதச்சுடர் அறக்கட்டை சார்பில் ஆதரவற்றோர் ஆசிரமம் கட்ட அடிக்கல்நாட்டு விழா...
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஒருக்காமலை அடிவாரத்தில் அமுதசுடர் அறக்கட்டளையின் சார்பில் புதிதாக ஆதரவற்றோர் ஆசிரமம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அமுதச்சுடர் அறக்கட்டளையின் சார்பில் புதிதாக கட்டப்படும் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கான பணிகளை சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் தங்கமுத்து தலைமையில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். அறக்கட்டளை தலைவர் சத்தியபிரகாஷ் முன்னிலை வகித்தார். தொழிலதிபர்கள் எஸ்எஸ்டி சண்முகசுந்தரம், ரத்தினம், பழனியப்பன், தங்கவேல், அரிமா சங்கங்களின் மாவட்ட நிர்வாகி மணிகுட்டி, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் நடேசன், ஓம்ராம் அறக்கட்டளை தலைவர் சுந்தரவடிவேல், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை தலைவர் சண்முகம், சமூக ஆர்வலர்கள் செல்வரத்தினம், வரலட்சுமி, சின்னாகவுண்டனூர் ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story