காதலியின் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற காதலன்

காதலியின் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற காதலன்
காதலி வீட்டுக்கு மது போதையில் சென்ற காதலன், ரகளையில் ஈடுபட்டு கிணற்றில் குதித்ததால் பரபரப்பு... எடப்பாடி தீயணைப்பு துறையினர் மீட்பு கொங்கணாபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை....
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி காதலன் மது போதையில் காதலியின் வீட்டுக்குச் சென்று ரகலையில் ஈடுபட்டு அருகிலுள்ள விவசாய கிணற்றில் 4 முறை குதித்து மேலே வந்தவர் 5வது முறை குதித்து விட்டு மேலே வர முடியாமல் தவித்ததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்டெடுத்தனர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் விஜய் என்பவருக்கும் கொங்கணாபுரம் அருகேயுள்ள பாலப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகள் துர்காதேவிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது .. துர்கா தேவி திருச்செங்கோடு அருகே உள்ள  (விவேகானந்தா ) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்ற இந்நிலையில் துர்காதேவியின் வீட்டிற்கு மதுபோதையில் வந்த காதலன் விஜய்  காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தி அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு காதலி துர்கா தேவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாலப்பட்டி அருகில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி விட்டு 4 முறை  குதித்தவர் 5 முறை மேலே வர முடியாமல் தவித்துள்ளார். இது குறித்து காதலியின் உறவினர்கள் கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கும் எடப்பாடி தீயணைப்புத்துறையினருக்கும் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்  காதலன் விஜய்யை உயிருடன் பத்திரமாக மீட்டடு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.. அதன் பின்னர் போலீசார் காதலன் விஜயிடம்  எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து துர்காதேவியும் விஜயுடன் செல்வதாக கூறியதால் அந்த பெண்ணின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றனர். காதலியை சேர்த்து வைக்கக் கோரி மது போதையில் வந்த காதலன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி தண்ணீரில் குதித்தவர் மேலே வர முடியாமல் தவித்த போது தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டெடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ...
Next Story