சங்கராபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

சங்கராபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
விழா
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது.அரசம்பட்டு கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா யாதவர் சங்கம் சார்பில் நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து முக்கிய தெருக்கள் வழியாக வந்தனர்.மாயவன் தலைமையில் பஜனை பாடல்கள் பாடிக்கொண்டு ஊர்வலம் வந்தனர். பொது மக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை யாதவர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Next Story