அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
கட்டமைப்பு
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.பேருராட்சி தலைவர் ரோஜாரமணி முன்னிலை வகித்தார்.தேர்தல் மேற்பார்வையாளராக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் சரசு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஆசிரியர்கள் முகமது கவுஸ்,இளையராஜா ஆகியோர் செயல்பட்டனர்.பள்ளி மேலாண்மை குழு தலைவராக பரிதா ஆரோக்யம்,துணை தலைவராக தெளலத்கான்,ஒருங்கிணைப்பாளராக தலைமை ஆசிரியர் வெங்கடேசன்,உள்ளாட்சி பிரதிநிதிகளாக ரோஜா ரமணி,பழனியம்மாள், மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.
Next Story