மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி

மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் 27 அணிகள் பங்கு பெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது
சிவகங்கை மருதுபாண்டியா் நகா் மின்னொளி மைதானத்தில் மாநில அளவிலான மின்னொளி கால்பந்துப் போட்டியில் சென்னை, மதுரை, தஞ்சாவூா், திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 26 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், சிவகங்கை அணியுடன் மோதிய தஞ்சாவூா் அணி அதிகப் புள்ளிகள் எடுத்து சாம்பியன் கோப்பையை வென்றது. இரண்டாவது இடத்துக்கான கோப்பை சிவகங்கை அணிக்கு வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில், ராமநாதபுரம் இளைய மன்னா் ஆதித்ய சேதுபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி. ராஜசேகரன், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்(ஓய்வு) முனியாண்டி, தொழிலதிபா் குமாா் ஆகியோா் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினா். உடற் கல்வி ஆசிரியா் சிக்கந்தா், சுந்தரராஜன், முத்துக்கிருஷ்ணன், சக்தி வேல், முத்துக்காா்த்தி, கிருஷ்ணன், கெளதம், உள்பட திரளான கால்பந்தாட்ட ரசிகா்கள் கலந்து கொண்டனா்.
Next Story