குழந்தையுடன் தாய் மாயம்!

குழந்தையுடன் தாய் மாயம்!
காணவில்லை
திருமயம் அருகே உள்ள ராங்கியத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(26), இவரது மனைவி மாலதி(24). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. மணிகண்டன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்ததால் மாலதி குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று குழந் தையுடன் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுபற்றி உறவினர் சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், பனையப் பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story