ஆமை வேகத்தில் நடக்கும் குடிநீர் திட்டப் பணி

ஆமை வேகத்தில் நடக்கும் குடிநீர் திட்டப் பணி
திருப்புத்துார் தாலுகா அலுவலகம் செல்லும் ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் குடிநீர் திட்டப் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்புத்துார் தாலுகா அலுவலகம் செல்லும் ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் குடிநீர் திட்டப் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருப்புத்துார் சின்னத்தோப்பு தெரு வழியாக பஸ் ஸ்டாண்டிலிருந்து தாலுகா அலுவலகம் செல்லும் ரோடு செல்கிறது. கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் இந்த ரோட்டில் அதிகமாக செல்வதுண்டு. சுற்றிலும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த ரோட்டில் தொடர்ந்து போக்குவரத்துகாணப்படும். இந்த ரோட்டில் திருமண மண்டபம் அருகில் மதுரை ரோடும் சந்திக்கிறது. நான்கு ரோடு சந்திக்கும்இடத்தில் 20 நாட்களுக்கு முன்பாக குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டி வேலை பார்த்தனர். அதன் பின்னர் இந்தப் பணியை நிறைவு செய்யாமல் சுற்றிலும் எச்சரிக்கை டேப் கட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த ரோட்டில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவில் பள்ளம் தெரியாமல் வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி விழுகின்றனர்.
Next Story