மக்களுடன் முதல்வர் திட்டத்தின் துவக்க விழா

மக்களுடன்  முதல்வர் திட்டத்தின் துவக்க விழா
அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான மதிப்புமிகு க.செல்வராஜ் அவர்களின் வழிகாட்டுதல்படியும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் துவக்க விழா இன்று மாதப்பூர் மற்றும் கள்ளிப்பாளையம் ஊராட்சிகான மக்களுடன் முதல்வர் முகாம் புத்தரச்சல் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.P. அசோகன் முன்னிலையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக துணை செயலாளரும், பொங்கலூர் ஒன்றிய குழு பெருந் தலைவருமான திரு.வக்கீல் S.குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உடன் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் & ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், கழக உடன் பிறப்புகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story