மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக தங்களது பண்ணை குட்டைகளை பதிவு அவசியம்

மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக தங்களது பண்ணை குட்டைகளை பதிவு அவசியம்
சிவகங்கை மாவட்டம், மீன் வளர்ப்போர், கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர் மற்றும் மீன் விரலிகள் உற்பத்தி செய்வோர் அனைவரும், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக தங்களது பண்ணை குட்டைகளை பதிவு செய்திடல் வேண்டும்
சிவகங்கை மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் மீன்குஞ்சுகள் வளர்ப்பு செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுசெய்த பயனாளிகளுக்கு குறைவான விலையில் தரமான மீன்குஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள மீன் வளர்ப்போர், கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர் மற்றும் மீன் விரலிகள் உற்பத்தி செய்வோர் அனைவரும், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக தங்களது பண்ணை குட்டைகளை பதிவு செய்திடல் வேண்டும். மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக தங்களது பண்ணை குட்டைகளை பதிவு செய்வதற்கு, உதவி இயக்குநர் அலுவலகம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை,எண். 5/3, பெருமாள் கோவில் தெரு,யூனியன் வங்கி (மாடியில்),சிவகங்கை – 630561 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575 – 240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9384824553 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story