கணபதி பாளையத்தில் மக்கள் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது

கணபதி பாளையத்தில் மக்கள் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை கணபதிபாளையம் என்ற பகுதியில் பள்ளிபாளையம் வட்டாரம் களியனூர், களியனூர் அக்ரகாரம், புதுப்பாளையம் அக்ரஹாரம், மற்றும் சமய சங்கிலி அக்ரகாரம் ஊராட்சிகளின் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமானது நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை, மின்சார துறை, பொதுப்பணித்துறை, மக்கள் நல்வாழ்வு மையம், நல வாரிய பதிவுகள், வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்த முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு, தங்களுடைய மனுக்களை அளித்தனர் . இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோர் முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிபாளையம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தளபதி செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ,குமாரபாளையம் வட்டாட்சியர், பஞ்சாயத்து தலைவர்கள், அரசுத்துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் இதில் கலந்து கொண்டனர்..
Next Story