கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் காயம்

கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் காயம்
கேஸ் கசிவால் ஏற்பட்ட விபத்தில் அங்கன்வாடி ஊழியர் காயமடைந்தார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஐந்து பனை பகுதியில் தோ.கவுண்டம்பாளையம் என்னும் இடத்தில் காடச்சநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும், அங்கன்வாடி பள்ளியில் பணியாற்றும் ஊழியர் மஞ்சு என்கின்ற மாரியம்மாள் வயது 40. கணவர் பெயர் பெருமாள் இவர்கள் இருவரும் ஐந்து பனை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், திங்கட்கிழமை அன்று இரவு உறங்கச் சென்ற  மாரியம்மாள் செவ்வாய்க்கிழமை அன்று காலை சமையல் செய்வதற்காக வீட்டின் மற்றொரு பகுதியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது கேஸ் சிலிண்டர் கசிவது போல அவருக்கு தோன்றவே, உடனடியாக மின்சார சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்து  மாரியம்மாள் காயமடைந்தார் . இதன் காரணமாக வீட்டின் மேல் புறம் உள்ள ஓடுகள் சிதறி வீடு சேதமடைந்தது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மாரியம்மாளை மீட்டு திருச்செங்கோடு அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பிறகு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாரியம்மாள் அனுப்பி வைக்கப்பட்டார்.  கேஸ் ரெகுலேட்டர் பழுது ஏற்பட்டதால் கேஸ் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதல்கட்ட தகவலாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Next Story