அதிமுகவினருக்கு போட்டிக்கு போட்டியாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு*

அதிமுகவினருக்கு போட்டிக்கு போட்டியாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு*
அதிமுகவினருக்கு போட்டிக்கு போட்டியாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு*
அருப்புக்கோட்டையில் அதிமுகவினருக்கு போட்டிக்கு போட்டியாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு அருப்புக்கோட்டையை காந்திநகர் பகுதியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் அண்ணாமலை உருவப்படத்தை செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு போட்டிக்கு போட்டியாக பாஜகவினர் அதே இடத்தில் உடனடியாக கூடி எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக கூறி நகர் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவப்படத்தை செருப்பால் அடித்து கிழித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நகர அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு போட்டிக்கு போட்டியாக அதே இடத்தில் சிறிது நேரத்தில் கூடிய அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய, மாவட்ட பாஜகவினர் அதிமுகவினரின் ஆர்ப்பாட்டத்திற்கு போட்டிக்கு போட்டியாக எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை செருப்பால் அடித்து அரசியல் தற்குறி எடப்பாடி பழனிச்சாமி ஒழிக எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய சிறிது நேரத்திலேயே அதே இடத்தில் பாஜகவினர் ஒன்று கூடி எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது அருப்புக்கோட்டையில் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் போராட்டம் நடத்திய பாஜகவினர் காவல்துறையினர் அங்கு வருவதற்குள் அங்கிருந்து கலந்து சென்றனர்.
Next Story