ராமநாதபுரம் கோவில் திருவிழா நடைபெற்றது

திருவாடானை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா பால்குட வீதி உலா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கிழக்குத் தெரு முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை 20ம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இன்று திருவிழாவான நிலையில்  பக்தர்கள் நேற்று கடன் செலுத்தும் விதமாக விரதம் இருந்து அம்மனுக்கு பால்குடம் எடுத்து திருவாடானை நான்கு வீதியில் வழியாக சுற்றி வந்து கோவிலில் அடைந்தனர் கோவிலில் பக்தர்கள் சுமந்து வந்த பாலால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். பின் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சியும் அண்ணதானமும் நடைபெறும்
Next Story