இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் கண்டன உரையாற்றினார்.அதில், வங்கதேசத்தில், ஆட்சி கலைப்பை தொடர்ந்து, அங்குள்ள இந்துக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. பலர் உயிரிழந்துள்ளனர். பெண்களை, பாலியல் வன்முறை செய்துள்ளனர். கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Next Story