பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வந்தது. இதுபோல் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,023 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 97.32 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 600 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. இதைப்போல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நேற்று 1,800 கன அடி நீர், காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 2,600 கன அடி தண்ணீர் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
Next Story