பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெற்றுக் கொண்டார்

பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெற்றுக் கொண்டார்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தெற்கே மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், சொத்துவரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள் உடனே தீர்வு காணக்கூடிய மனுக்களுக்கு உடனே தீர்வு காணும் பணிகளும் நடைபெற்றன. அந்த வகையில் மனு அளித்த 15 நிமிடத்தில் பிறப்பு சான்றிதழ், சொத்து வரி பெயர் மாற்றம் குடிநீர் கட்டண முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மனு அளித்தவர்களிடம் வழங்கினார். இந்த கூட்டத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதற்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, மாநகராட்சி செயற்பொறியாளர் சரவணன், துணை ஆணையர் ராஜாராம், உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளரிடம் பேசும்போது தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்தில் உள்ள பொது மக்களுக்கும் குறைகளை தீர்க்கும் வகையில் தொடர்ச்சியாக வாரம் தோறும் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் வரக்கூடிய கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதுபோல் தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் சுமார் 2000 சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வரும் மழைக்காலத்தில் மழை வெள்ளம் தேங்காதவாறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது புதிதாக மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் கோரம்பள்ளம் குளத்துக்கு வரக்கூடிய மழை வெள்ளநீர் விரைவாக கடலுக்கு செல்லும் வகையில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகளும் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது இதன் காரணமாக பெருமழை பெய்தாலும் தூத்துக்குடியில் மழை நீர் தேங்காது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
Next Story