மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மனுதாரர்கள் நேரடியாக தங்களது மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனர்
மதுரை மாநகர காவல் துறை பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 37 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை அளித்தனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட சரக காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story