பொன்மேனி காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை

பொன்மேனி காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை
ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவல்லிக்கேணி அம்மனை வழிபட்டனர்.
மதுரை பொன்மேனி பகுதியில் தேவேந்திரகுல வேளாளருக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் திருக்கோவில் 51 ஆம் ஆண்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உலக நன்மை வேண்டியும் மழை பெய்ய வேண்டிய விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இவ்விழாவில் பெரிய குடும்பனார் மகாராஜன் சின்ன குடும்பனார் அய்யணன் மற்றும் பாஜக மகளிர் அணி மதுரை மாவட்ட செயலாளர் உமாராணி, துணை தலைவி லிங்கேஸ்வரி,மணிகண்டன், மாசாணம்,எம் ஜி என்ற பொன்மனச் செல்வன்,ராஜ்குமார் பால்பாண்டி ஐயங்காளை சுந்தர்ராஜன் ரவி உட்பட வினா கமிட்டியினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story