செல்லம்பட்டி அய்யனார் குளம் ஊராட்சி நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம்

செல்லம்பட்டி அய்யனார் குளம் ஊராட்சி நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம்
பாப்பாபட்டி போடுவார்பட்டி கட்ட கருப்பன் பட்டி குறளக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் மனுக்களை அளித்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யனார்குளம், . ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அய்யனார்குளம், பாப்பாபட்டி, போடுவார்பட்டி, சடச்சிபட்டி, குறவக்குடி, அ. புதுப்பட்டி, கட்டகருப்பன்பட்டி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் அனிதாபிரகலாதன், முருகானந்தம், செல்வராணிரவி, ராஜதுரை, திருப்பதி, தேவி ஆகியோர் தலைமையிலும்,ஊரக வளர்ச்சி தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் ராஜா, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கப்பாண்டி,கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் ,சமூக பாதுகாப்புத் துறை வட்டாட்சியர் இந்திரா காந்தி, உதவி பொறியாளர்கள்,உசிலம்பட்டி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐய்யப்பன் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, மருத்துவ துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை. உள்ளிட்ட 29 அரசுத்துறைகள் இம்முகாமில் தனித்தனியே அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அய்யனார்குளம், பாப்பாபட்டி, போடுவார்பட்டி, சடச்சிபட்டி, குறவக்குடி, அ. புதுப்பட்டி, கட்டகருப்பன்பட்டி உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர். மேலும் தரப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Next Story