மூதாட்டியை வெட்டி நகை பறிப்பு

மூதாட்டியை வெட்டி நகை பறிப்பு
பறிப்பு
வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் வெட்டி, நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். உளுந்துார்பேட்டை, மன்னார்சாமி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி துளசி,72; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு வராண்டாவில் துாங்கினார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் துளசி, காதில் அணிந்திருந்த தோடை கழற்ற முயன்றனர். திடுக்கிட்ட துளசி சத்தம் போடவே, அவரது கழுத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தோட்டை கழற்றிக் கொண்டு தப்பிச் சென்றனர்.
Next Story