சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
போலீசார் நடவடிக்கை
சேலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 26-ந் தேதி பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சேலத்தை சேர்ந்த ஒருவரை சிறுமி காதலித்து கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், அந்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story