கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சங்க தலைவர் பாராட்டு தெரிவித்தார்
பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் கல்வி மாவட்ட குறுமைய அளவில் 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இறுதியில் சேலம் புனித மரியன்னை பள்ளி மாணவிகள் முதல் பரிசு பெற்றனர். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. இதற்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலோசகர் விஜயராஜ், செயலாளர் சண்முகவேல், துணைச்செயலாளர்கள் அகிலாதேவி, ஹரிகிருஷ்ணன், நிர்வாகி நந்தன், பள்ளி தலைமை ஆசிரியை இருதய பிரான்சிஸ், உடற்கல்வி ஆசிரியர் லீமாரோஸ், பயிற்சியாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story