காய்கறி கடையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கும்மிடிப்பூண்டி அருகே காய்கறி கடையில் மாமுல் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் காய்கறி கடைக்குள் புகுந்து கடையில் வேலை பார்த்த இளைஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டிய சம்பவம் பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.
கும்மிடிப்பூண்டி அருகே காய்கறி கடையில் மாமுல் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் காய்கறி கடைக்குள் புகுந்து கடையில் வேலை பார்த்த இளைஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டிய சம்பவம் . பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் வயது 36.இவர் கன்னியம்மன் கோயில் மேம்பாலத்தின் கீழ் சில மாதங்களாக காய்கறி கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக காய்கறி கடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (22) பணியாற்றி வருகிறார். காய்கறி கடைக்குள் புகுந்த வெட்டுக்காலனி பகுதியைச் சேர்ந்த 4 பேர் கடையில் கடன் கேட்டுள்ளனர் அதை தர மறுத்துள்ளார் மேலும் மாமூல் கேட்டும் மிரட்டியதாக கூறப்படுகிறது. தர மறுத்த இளவரசனை அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளது. இது சம்பந்தமாக கடை உரிமையாளர் ரவி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வெட்டு காலனி பகுதியைச் சேர்ந்த விஜி(23) பார்த்த, உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென காய்கறி கடையில் நுழைந்து இளவரசனின் வயிறு, தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் பலமாக அறிவாளால் வெட்டியுள்ளனர். விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விஜி (22) என்பவரை மட்டும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவான பார்த்தா உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர். மேலும் வெட்டு காயம் அடைந்த இளவரசன் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கும்முடிப்பூண்டி கவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Next Story