ஒரு இலட்சம் மீன் விரலிகள், கையிருப்பு ஆட்சியர் தகவல்

ஒரு இலட்சம் மீன் விரலிகள்,  கையிருப்பு ஆட்சியர் தகவல்
சிவகங்கையில் மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள், கண்மாய்களில் மீன்பாசி குத்தகை எடுப்போர் மற்றும் மீன் விரலிகள் உற்பத்தி செய்வோர், பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
சிவகங்கை மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 1.00 இலட்சம் கட்லா மீன் விரலிகள், கையிருப்பில் உள்ளன. எனவே, மாவட்டத்தில் உள்ள மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் கண்மாய்களில் மீன்பாசி குத்தகை எடுப்போர் மற்றும் மீன் விரலிகள் உற்பத்தி செய்வோர் போன்ற மீன் வளர்ப்போர், விவசாயிகள் மீன் விரலிகளை வாங்கி பயன்பெறலாம். மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணை,கீழப்பூங்குடி ரோடு, ஒக்கூர் சிவகங்கை – 630561 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575 – 240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மீன்வள ஆய்வாளர் அவர்களை 9384824553 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story