ரிஷிவந்தியம் கல்லுாரியில் பெண்களுக்கு சிறப்பு முகாம்

ரிஷிவந்தியம் கல்லுாரியில் பெண்களுக்கு சிறப்பு முகாம்
முகாம்
ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் வளர் இளம் பெண்களுக்கான முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் (பொ) மணிகண்டன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். முகாமில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அமிர்தவள்ளி பங்கேற்று பெண் கல்வியின் அவசியம், வளர் இளம் பருவத்தில் மாணவிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெண் சிசுக்கொலை, சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசி, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். துறைத்தலைவர்கள் தமிழ்செல்வன், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story