சங்கரன்கோவில் அருகே திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் நடைபெற்றது

சங்கரன்கோவில் அருகே  திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் நடைபெற்றது
திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் குருக்கள்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொது உறுப்பினர் கூட்டம் ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தும், தேர்தல் காலத்தில் வாக்குகளை சேகரிக்க உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தும், ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து கிளைக் கழகங்களிலும் வரும் முப்பெரும் விழாவில் திமுகவின் இரு வண்ணக் கொடியேற்றி சிறப்பிக்க வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றினர். சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகப்படியாக இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஒன்றியத்திற்குட்பட்ட மேலநீலிதநல்லூர் வாக்குச்சாவடியில் அதிக வாக்குகளை பெற்று தந்த கிளைச் செயலாளருக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணமும், தமிழினத் தலைவர் கலைஞர் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துசெல்வி, மாநில மருத்துவர் அணி டாக்டர். செண்பகவிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story