அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆவரங்காடு அரசு பள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்காக 2023-24 குமாரபாளையம்  சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 10 லட்சம் மதிப்பிலான 65 பென்ச் மற்றும் டெஸ்க்குகளை மாணவர்கள் பயன்பாட்டிற்காக. குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி   வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் ஒன்றிய கழக சேர்மன் செந்தில்,வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் பி.எஸ் வெள்ளியங்கிரி ,அம்மா பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணி ,நகரத் துணைச் செயலாளர் ஜெய் கணேஷ் ,வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஐடி விங் பிரிவினர், பள்ளியின் தலைமை ஆசிரியை ஆசிரியைகள்,பள்ளி மாணவ மாணவியர்  ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story