வயநாடு பேரழிவுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக நிவாரண நிதி

வயநாடு பேரழிவுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக நிவாரண நிதி
சங்க நிர்வாகிகள் கேரள முதல்வரிடம் வழங்கினர்.
கேரளா மாநிலம், வயநாடு நிலச்சரிவு பேரழிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நிவாரணம் வழங்க, நமது சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உண்டியல் மூலம் நிதி சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட நிதி ரூ.31,00,442- (ரூபாய் முப்பத்தியோரு லட்சத்து நானூற்றி நாற்பத்தி இரண்டு மட்டும்) கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஐ கேரளா மாநில தலைமைச் செயலகத்தில் மாநில நிர்வாகிகள் சந்தித்து வழங்கினர்.தமிழ்நாடு முழுவதும் உணர்வு பூர்வமாக நிதியை திரட்டிய மாவட்ட நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் அனைவருக்கும் கேரள அரசு நன்றியை தெரிவித்தது.
Next Story