விழுப்புரம் அருகே ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

விழுப்புரம் அருகே ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி தலைமை தாங்கி வழங்கினார். பொது சுகாதார நிபுணர் நிஷாந்த், ஆல் தி சில்ரன் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். 73 கர்ப்பிணிகளுக்கு பேரிச்சம்பழம், அவல், சோயாபீன், உலர் திராட்சை, நாட்டு சர்க்கரை, நெய் உள்ளிட்ட ஊட்டச்சத்து உதவி பெட்டகம் வழங்கப்பட்டது. மருத்துவர் கோமதி, கண்காணிப்பாளர் மஞ்சுளா, பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர்.
Next Story